வி.சாந்தாராம் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், திரைக்கதையமைப்பாளர் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் தெரிந்து கொள்வோம்
திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், திரைக்கதையமைப்பாளர் சாந்தாராம்
பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் தெரிந்து கொள்வோம்
மராட்டிய மாநிலத்தில் உள்ள கோலாப்பூரில் 1901-ல் பிறந்தார். இவரின் முதல் திருமணம் முதல் மனைவி நடிகை ஜெயஸ்ரீயை மணந்தார். பின் அவருடன் மனக்கசப்பு ஏற்படவே அவர்களின் திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது. பின் ஜனக் ஜனக் பாயல் பாஜே திரைப்படத்தின் கதாநாயகியான சந்தியாவை மறுமணம் செய்துகொண்டார்.
வி.சாந்தாராமின் மகள்:
இவரது மகள் ராஜ்யஸ்ரீ ஆவார். இவரும் மிக பெரிய நடிகையாவார். காதல் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டுக்குச் சென்று விட்டார்.
வி . சாந்தாராம் புகழ்பெற்ற குறிப்பிட்ட சில படங்கள்:
கோட்னீஸ் என்ற படம் இவருக்கு பேரும் புகழும் சம்பாதித்து கொடுத்தது. இதில் இவர் கதாநாயகனாகவும் நடித்தார். பின் சாந்தாராமுக்கு அகில இந்திய அளவில் புகழை சேர்த்த படங்கள் பர்சாயின், ஆத்மி, சகுந்தலா, தஹேஜ், படோசி, சந்திரசேனா, அமிர்தமந்தன் போன்ற படங்களாகும். 'தோ ஆங்கேன் பாரஹாத்' எனும் இந்தி படம் பல விருதுகளை இவருக்கு வாங்கி தந்தது. 'தீன் பத்தி சார் ரஸ்தா' என்ற இவரது படம் பெரும் வெற்றி கண்டது.
வி. சாந்தாராம் விருதுகளும், சிறப்புகளும்:
சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது - 1958
பத்ம விபூஷண் - 1992
சாந்தாராமின் 116வது பிறந்த நாளை சிறப்பிக்கும் பொருட்டு, 18 நவம்பர் 2017 அன்று கூகுள் நிறுவனம் முகப்புப் பக்கத்தில் சாந்தாராமின் சித்திரம் வெளியிட்டுள்ளது.
சில சுவாரஸ்ய தகவல்கள்:
1933- ல் சாந்தாராம் “சீதா கல்யாணம்” என்ற படத்தை மராத்தி, இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் தயாரிக்கத் தீர்மானித்தார். தமிழ்நாட்டில் அவருக்குத் தெரிந்திருந்த மூன்று தமிழர்களின் பெயர்கள் முருகதாசா, ராம்நாத், சேகர். அவர்கள் மூவரையும், தான் தயாரிக்க இருந்த “சீதா கல்யாணம்” தமிழ்ப்பதிப்பில் பணியாற்ற கோலாப்பூர் வரமுடியுமா என்று கேட்டுக் கடிதம் எழுதினார் சாந்தாராம்.
மூவரும் உடனே கோலாப்பூருக்கு விரைந்தனர். அங்கு படத்திற்கான தமிழ், வசனங்களை எழுதியதுடன், இயக்கத்திலும் உதவியாளராகப் பணியாற்றினர் முருகதாசா. ஒளிப்பதிவில் உதவி செய்தார் ராம்நாத். “ஆர்ட் டைரக்ஷன்” உதவியாளரானார் ஏ.கே.சேகர் !. இப்படித்தான் பத்திரிகையாளர்களாக இருந்த அந்த மூவரும் திரைப்படத்துறையில் நுழைந்தனர். கோலாப்பூரில் சாந்தாராமின் பிரபாத் ஸ்டுடியோவில் திரைப்பட உருவாக்க நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு மூவரும் மதராஸ் பட்டணத்திற்கு திரும்பினர்.
இங்கு தமிழ்ப் படங்களைத் தயாரிக்கும் திட்டத்துடன் “வேல்பிக்சர்ஸ்” என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். முருகதாசா பல படங்களை இயக்கினார். கே.ராம்நாத் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து “ஒளிப்பதிவு மேதை” என்று புகழ் பெற்றார். ஏ.கே.சேகர் (”சந்திரலேகா” படத்தின் ”முரசு நடனம்” உள்பட) ஏராளமான படங்களில் கலை இயக்குனராகப் பணியாற்றி முத்திரை பதித்தார்.
மராட்டிய மாநிலத்தில் உள்ள கோலாப்பூரில் ஓர், எளிய குடும்பத்தில் 1901–ம் ஆண்டு நவம்பர் 18–ந் தேதி சாந்தாராம் பிறந்தார். தந்தை பெயர் வன்குந்தரே. சாந்தாராம் இளைஞராக இருந்தபோது 1918–ம் ஆண்டு கர்நாடகாவிலுள்ள ஊப்ளியில் ஒரு சிறிய தொழிற்சாலையில் அடித்தளப் பணியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்பு, நல்ல வேலை தேடி மும்பை பயணமானார். ஒருவழியாக வட இந்தியாவில் செயல்பட்டு வந்த பாலகந்தர்வ நாடகக் கம்பெனியில், நாடக நடிகராக சேர்ந்தார். நாடக அனுபவத்தைக் கொண்டு 1920–ம் ஆண்டில், பாபுராவ் மகாராஷ்டிரா பிலிம் கம்பெனியில் பல ஊமைப் படங்களில் நடித்தார். பல்வேறு பாத்திரங்களை ஏற்று நடிப்பில் தன்னைப் பக்குவப் படுத்திக் கொண்டார்.
இது போன்ற சில சுவாரஸ்ய தகவல்கள் தெரிந்து கொள்ள நமது வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க யூடியூப் சேனல் சப்கிரைப் பண்ணுங்க
நன்றி மீண்டும் சந்திப்போம்
Post a Comment
0Comments