எம்.எஸ் சுந்தரி பாய் பற்றிய நாம் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள்
பழைய படங்களில் வில்லி, குணச்சித்திரம், அம்மா, தங்கை, என எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் கச்சிதமாக பொருந்தி நடிக்கும் நடிகை எம் எஸ் சுந்தரிபாய் அவர்கள்
நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகி, கதாநாயகி, வில்லி வேடங்களையும் ஏற்று 300 படங்களுக்கு மேல் நடித்தவர், சுந்தரிபாய்.
பிறப்பு;
1923 ல் மதுரையில் பிறந்த சுந்தரிபாய் மராத்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். தகப்பனார் ராமாராவ் ரயில்வே துறை ஊழியர். அவருடைய மனைவி நாகமணிபாய், இந்தத் தம்பதியருக்கு சுந்தரிபாய் உட்பட ஐந்து பெண் குழந்தைகள். ஏழு பேரைக் கொண்ட பெரிய குடும்பம். அச்சாணியாக இருந்து குடும்பத்தைக் காத்த தந்தை ராமாராவ் உடல்நலக் கோளாறு காரணமாக திடீர் மரணமடையவே ஆறு பெண்களை உள்ளடக்கிய குடும்பம் செய்வதறியாது தவித்துப் போய் நின்றது. மகள்களைக் காப்பாற்றுவதற்காக செவிலியர் பயிற்சி பெற்று மதுரை மருத்துவமனையில் பணியாற்ற முன்வந்தார் தாயார் நாகமணிபாய்.
சின்ன வயதிலேயே இசை மீது ஆர்வம் கொண்டவர். இசை மீது சுந்தரிபாய்க்கு இருந்த ஆர்வத்தை கவனித்த அவர் பெற்றோர்கள், முறைப்படி சங்கீதம் கற்றுத்தந்தனர். அப்போது, எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த 'சிந்தாமணி' படம் வெளிவந்து ஒரு வருடத்துக்கு மேலாக ஓடிக்கொண்டிருந்தது. அதில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாம் சுந்தரிபாய்க்கு மனப்பாடம். அந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பதுதான் அவரது பொழுதுபோக்கு.
சுண்டி இழுக்கும் அழகும் துறுதுறுவென அலைபாயும் கண்களும், வாயாடித்தனமான வெடுக்குப்பேச்சு அனைத்தையும் கொண்ட சுந்தரிபாய் பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட நாடகங்களில் பங்கேற்று, ஆடிப் பாடி நடித்து வந்தார். இதைப் பார்த்த அவர்களின் குடும்ப நண்பர் ஒருவர், இந்தச் சிறுமி விளம்பரப் படங்களில் நடிக்கலாமே என்று ஆலோசனை கூறவே, அவரையே துணைக்கு அழைத்துக் கொண்டு வாய்ப்பைத் தேடி பம்பாய்க்கு ரயிலேறினார்கள் தாயும் மகளும். அந்தப் பயணம் 15 வயது சுந்தரிபாய்க்கு வெற்றிகரமான திரை வாழ்க்கையையும், பிரகாசமான எதிர்காலத்தையும் துவக்கி வைத்தது.
படங்கள் அறிமுகம்;
‘காபி ஆஸ்பிரின்’ என்ற விளம்பரப் படத்தில் நடித்ததைப் பார்த்த சில திரைப்படத் தயாரிப்பாளர்கள், தங்கள் படங்களில் சிறு சிறு படங்களில் நடிக்க வாய்ப்பளித்தார்கள். அப்படித்தான் 1937ல் ‘சுகுண சரஸா’, ‘தான சூர கர்ணா’ போன்ற படங்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து, சிறிய வேடம் என்றாலும் ‘சூர்ய புத்திரி’ படத்திலும் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. ஆரம்பப் படமான ‘சுகுண சரஸா’வில் நடித்ததற்கான ஊதியம் எவ்வளவு தெரியுமா? எதிர்கால வெற்றிகளுக்கான அச்சாரமாக வெறும் 20 ரூபாய்கள் மட்டுமே அளிக்கப்பட்டது. அப்படத்துக்காக மூன்று நாட்கள் நேரம் ஒதுக்கி நடித்துக் கொடுத்திருக்கிறார்.
நடிப்பு வளர்ச்சி;
இதன் பின், ஜெமினி நிறுவனத்தில் மாத சம்பளத்திற்கு சேர்ந்தார்.
இதே சமயத்தில்தான், கொத்தமங்கலம் சுப்புவும் ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்தார். ஜெமினியின் முதல் படமான 'மதனகாமராஜன்' படத்தில், கொத்தமங்கலம் சுப்புவும், சுந்தரிபாயும் நடித்தனர். அதைத்தொடர்ந்து, காதல் ஏற்பட்டு இருவரும் 1939 ல் மணந்து கொண்டனர்.
ஜெமினியின் அப்போதைய ஆஸ்தான நாயகி புஷ்பவல்லியை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட ‘தாசி அபரஞ்சி’ படத்தில், தாசி வீட்டு வேலைக்காரப் பெண்ணாக நடித்தார் சுந்தரிபாய். கோயில் குருக்கள் (கொத்தமங்கலம் சுப்பு) தாசியின் மீது ஆசை கொண்டு அவளுக்குக் கோயில் பிரசாதத்தில் வசிய மருந்தை வைத்துக் கொடுக்க, அபரஞ்சியோ அதை வேலைக்காரிக்குக் கொடுக்க, வேலைக்காரி அதை ஆட்டுக்குட்டிக்குத் தின்னக் கொடுத்து விடுகிறாள். ஆட்டுக்குட்டி காதல் போதை தலைக்கேறி, கோயில் குருக்களைத் தேடி வருவதாக அமைக்கப்பட்ட நகைச்சுவைக்காட்சி அப்போது ரசிகர்களை வயிறு நோகச் சிரிக்க வைத்ததாம்.
இதன்பின், ஜெமினி எடுத்த படங்களில் எல்லாம் எனக்கொரு வேடம் தவறாமல் கிடைத்து வந்தது. 1945-ல் ஜெமினி தயாரித்த 'கண்ணம்மா என் காதலி' என்ற படத்தில் நான் கதாநாயகியாக நடித்தேன். வசனமும், பாடலும் எழுதியதுடன் டைரக்ஷனையும் சுப்புதான் கவனித்தார். இந்தப் படத்தின் கதாநாயகனாக எம்.கே.ராதா நடித்தார்.
சந்திரலேகா படத்தில்;
1948-ல் ஜெமினியின் பிரமாண்டமான படமான 'சந்திரலேகா'' வெளிவந்தது. அதில் முக்கிய வேடத்தில் சுந்தரிபாய் நடித்தார்.
சுந்தரிபாய், ஜெமினியில் சேர்ந்தபோது அவரது மாத சம்பளம் 150 ரூபாய். சந்திரலேகாவில் நடித்தபோது, அது 1,500 ரூபாயாக உயர்ந்தது. ஜெமினியின் வெற்றிப்படமான 'சம்சார'த்தில், வில்லி வேடத்தில் சுந்தரிபாய் நடித்தார். 'வள்ளியின் செல்வன்' படத்தில், குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.
ஏறத்தாழ 17 ஆண்டுகள் ஜெமினியில் பணியாற்றினார். ஒப்பந்தம் முடிவடைந்தபின், வெளிப்படங்களிலும் நடித்தார். அவற்றில் பெரும்பாலானவை வில்லி வேடங்கள்.
கே. பாலச்சந்தர் இயக்கத்தில்;
கே.பாலசந்தர் தயாரித்த 'அரங்கேற்றம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். சுந்தரிபாய் நடித்த படங்கள் ஏறத்தாழ 300. சில ஆண்டுகள் உடல் நலம் இல்லாமல் இருந்த சுந்தரிபாய் 12 மார்ச்சு 2006இல் காலமானார்.
எம்.எஸ்.சுந்தரி பாய் நடித்த திரைப்படங்கள்
சுகுணா சரசா (1937)
ஆத்மி (1939)
தான சூர கர்ணா, (1940)
சூர்யபுத்திரி (1941)
மதன காமராஜன் (1941)
நந்தனார் (1942)
பக்த நாரதர் (1942)
தாசி அபரஞ்சி (1944)
கண்ணம்மா என் காதலி (1945)
மிஸ் மாலினி (1947)
சந்திரலேகா (1947)
சம்சாரம் (1950)
மூன்று பிள்ளைகள் (1952)
அவ்வையார் (1953)
வள்ளியின் செல்வன் (1955)
பொம்மை கல்யாணம் (1958)
வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
நான் வளர்த்த தங்கை, (1958)
எங்க வீட்டு மகாலட்சுமி (1959)
மஞ்சள் மகிமை, (1959)
தெய்வமே துணை (1959)
தெய்வப்பிறவி (1960)
படிக்காத மேதை (1960)
நான் கண்ட சொர்க்கம் (1960)
பாதை தெரியுது பார் (1960)
பாலும் பழமும் (1961)
எல்லாம் உனக்காக (1961)
பனித்திரை, (1961)
புனர் ஜென்மம் (1961)
குமுதம் (1961)
எங்களுக்கும் காலம் வரும், (1961)
மனிதன் மாறவில்லை (1962)
அன்னை இல்லம் (1963)
கொடுத்து வைத்தவள் (1963)
ஆண்டவன் கட்டளை (1964)
வாழ்க்கை வாழ்வதற்கே (1964)
பூமாலை (1965)
மோட்டார் சுந்தரம் பிள்ளை (1966)
செல்வம் (1966)
சின்னஞ்சிறு உலகம் (1966)
சித்தி, (1966)
தேடி வந்த திருமகள், (1966)
பேசும் தெய்வம் (1967)
ஊட்டி வரை உறவு (1967)
பொன்னான வாழ்வு (1967)
காதல் பறவை, (1967)
நூறாண்டு காலம் வாழ்க (1967)
அனுபவம் புதுமை (1967)
கலாட்டா கல்யாணம் (1968)
என் தம்பி (1968)
கணவன் (1968)
ஜீவனாம்சம் (1968)
பணமா பாசமா?(1968)
அன்புவழி, (1968)
திருடன் (1969)
குழந்தை உள்ளம் (1969)
சுபதினம், (1969)
சாந்தி நிலயம் (1969)
பெண்ணை வாழ விடுங்கள் (1969)
என் அண்ணன் (1970)
தபால்காரன் தங்கை (1970)
நம்ம வீட்டு தெய்வம், (1970)
ஏன்? (1970)
தங்கைக்காக (1971)
தேனும் பாலும் (1971)
இருளும் ஒளியும் (1971)
வெகுளி பெண் (1971)
வீட்டுக்கு ஒரு பிள்ளை (1971)
உத்தரவின்றி உள்ளே வா, (1971)
ராணி யார் குழந்தை?(1972)
பிள்ளையோ பிள்ளை (1972)
தங்கதுரை, (1972)
அரங்கேற்றம் (1973)
மணிப்பயல் (1973)
நான் அவனில்லை (1974)
தாய் பிறந்தாள் (1974)
நினைத்ததை முடிப்பவன் (1975)
சில நேரங்களில் சில மனிதர்கள் (1976)
நிழல் நிஜமாகிறது (1978)
அக்னிப்பிரவேசம்’ (1979)
மழலைப்பட்டாளம் (1980)
பாமா ருக்மிணி (1980,,)
குறிப்பு;
பண்முக நடிப்பு திறமையை கொண்ட சுந்தரி பாய்
என்றும் நம் நினைவில்
இது போன்ற சுவாரஸ்யமான தகவல்கள் தெரிந்து கொள்ள நமது வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க யூடியூப் சேனல் உள்ளது அதையும் சப்கிரைப் பண்ணுங்க
நன்றி
Post a Comment
0Comments