ஆன்மீகத்தில் புரட்சி செய்த பங்காரு அடிகளார் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்
பங்காரு அடிகளார் (Bangaru Adigalar,3 பிறப்பு மார்ச்1941 – மறைவு19 அக்டோபர் 2023) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் ஆன்மீக குரு ஆவார். ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ, கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக இருந்தார். இவரைப் பின்பற்றுபவர்களாலும், ஆதிபராசக்தி கோவிலின் பக்தர்களாலும் பங்காரு அடிகளாரை அம்மா' என்று பக்தியோடு அழைக்கப்படுகிறார். உச்ச சக்தியின் அவதாரமே - ஆதிபராசக்தி என்று இவரைப் பின்பற்றுபவர்களால் நம்பப்படுகிறார்கள். இவருக்கு ஏராளமான பக்தியுள்ள விசுவாசிகள் உள்ளனர். பங்காரு அடிகளார் கோவில் மற்றும் ஆன்மிகத்திலும் சீர்திருத்தங்களை செயல்படுத்தியுள்ளார்.
பங்காரு அடிகளார் பிறப்பு வளர்ந்தது
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்திற்கு அருகில் மேல்மர்வத்தூரில் 1941 மார்ச் 3 இல் கோபால நாயக்கர், மீனாம்பாள் ஆகியோருக்கு மகனாக பங்காரு அடிகளார் பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணி. இவரது தந்தை-வழிப் பாட்டனார் துரைசாமி நாயக்கர் ஒரு நிலக்கிழார் ஆவார். சோத்துப்பாக்கம் தொடக்கப்பள்ளியிலும், அச்சிறுபாக்கம் உயர்நிலைப்பள்ளியிலும் கல்விக் கற்றார். பின்னர் செங்கல்பட்டு, அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்தார். தொடக்கத்தில் மின்சாரப் பணியாளர், பேருந்து நடத்துநர் போன்ற சிறு பணிகளை ஆற்றி வந்தவர், பின்னர் அச்சிறுபாக்கத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார். 1968-இல் லட்சுமி என்பாரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்பழகன், செந்தில் குமார், ஸ்ரீதேவி, உமாதேவி என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
பங்காரு அடிகளார் ஆன்மீக வாதியாக மாறியது
1966-இல் பங்காரு அடிகளாரின் குடும்பத்தில் நடந்த விழா ஒன்றில் இவரை ஆதிபராசக்தி ஆட்கொண்டதாகவும், மேல்மருவத்தூரில் அற்புதம் நடக்க போவதாகவும், தான் அங்கு கோயில் கொள்ளப்போவதாகவும் ஆதிபராசக்தி அம்மன் கூறியதாகவும் கூறப்பட்டது. இவரது வீட்டில் இருந்த வேப்ப மரத்தில் பால் வடிவதாக தகவல் பரவவே ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு செல்ல ஆரம்பித்தனர். அந்த இடத்தில்தான் தற்போது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் அமைந்துள்ளது.
இறப்பு
தற்போது பங்காரு அடிகளார்
தனது 82 ஆம் வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 19 அக்டோபர் 2023 அன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ஆதி பராசக்தி தொண்டு நிறுவன மருத்துவக் கல்வி மற்றும் கலாசார அறக்கட்டளையின் தலைவராக இருந்த பங்காரு அடிகளாரின் ஆன்மீக சேவையைப் பாராட்டி 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு சிறப்பித்துள்ளது.
குறிப்பு:
ஆன்மீகத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்தவர் என்று அழைக்கப்பட்டவர் இவர். சித்தர் பீடம், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளையும் செய்தவர் பங்காரு
அடிகளார்.ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற
முறையை அமல்படுத்தி பெரும் புரட்சி செய்தவர்.
பங்காரு அடிகளாரை பின்பற்றும்
பக்தர்கள் 15 நாடுகளில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள் பலர் இவரை தீவிரமாக பின்பற்றி வந்தனர். பங்காரு அடிகளாரின் ஆன்மிக சேவையை பாராட்டி அவருக்கு 2019ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கியது
மத்திய அரசு
ஆன்மீகத்தில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் பங்காரு அடிகளார் ஏழை எளிய மக்களுக்கு
பல நல்ல பல உதவிகள் செய்து வந்தார்
இவரின் இழப்பு ஆன்மீகத்தில் ஈடு செய்ய முடியாத
இழப்பு
இது போன்ற சுவாரஸ்யமான தகவல்கள் தெரிந்து கொள்ள நமது வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க யூடியூப் சேனல் சப்கிரைப் பண்ணுங்க
நன்றி ✍️✍️✍️
Post a Comment
0Comments