முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பியூ சின்னப்பா பற்றிய சில தகவல்கள் தெரிந்து கொள்வோம்
முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பியூ சின்னப்பா பற்றிய சில தகவல்கள் தெரிந்து கொள்வோம் தமிழ் சினிமாவில் பாகவதர் காலத்தில் அவரை சூப்பர் ஸ்டாராகவும் பியூ.சின்னப்பாவை சூப்பர் ஆக்டராகவும்
மக்கள் விரும்பினர் ரஜினி கமல்.அதற்கு முன்பு எம்ஜிஆர், சிவாஜி அதற்கு முன் பாகவதர் சின்னப்பா ஜோடிதான் தமிழ் சினிமாவை கலக்கிறார்கள்
அதில் பியூ சின்னப்பா சண்டை காட்சிகளில் டூப் போடாமல் சிறப்பாக நடிக்கும் திறமை வாய்ந்தவர் பியூ சின்னப்பா
முதன் முதலில் தமிழ் சினிமாவில் இரண்டு வேடங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் பி.யூ.சின்னப்பா புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்திற்கு முன்தமிழ் சினிமாவின் செல்வாக்கு மிக்க நடிகராகத் திகழ்ந்தார். வறுமை காரணமாக கயிறு திரிக்கும் வேலைக்குச் சென்றுபின்னர் நடிப்பின் மீது கொண்ட ஆசையால் நாடக சபாக்களில் வாய்ப்பு பெற்று பின்னாளில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தார். வாள் சண்டை, சிலம்பம் போன்றவற்றில் மிகுந்த தேர்ச்சி பெற்ற பி.யூ.சின்னப்பா உத்தமபுத்திரன், ஜகதலப்பிரதாபன், கண்ணகி, ஆர்யமாலா போன்ற படங்களில் நடித்து பெரும்புகழ் பெற்றார்.
இதில் உத்தமபுத்திரன் படம்தான் இரட்டை வேடங்களில் அவர் தோன்றியது. தமிழின் முதல் இரட்டை வேட சினிமாவான உத்தமபுத்திரன்திரைப்படத்தில் அப்போதைய தொழில்நுட்ப உதவிகளைக் கொண்டு இருவரும் வரும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இப்படத்தின் மூலமாக தியாகராஜ பாகவதருக்கு கடும்போட்டியை உருவாக்கினார். அப்போதிருந்தே யார் சூப்பர் ஸ்டார் என்ற மோதல் வலுக்கத் துவங்கியது தற்போது வரை நடந்து கொண்டிருக்கிறது. தான் சம்பாதித்த பணத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நிறைய வீடுகளை வாங்கியதால், புதுக்கோட்டை அரசர், இவருக்கு அவ்வூரினர் யாரும் வீடுவிற்க தடைவிதித்ததாக செவிவழித் தகவல் உண்டு.
“இந்திரஜித்” படத்தில் நடித்த இவர், குடிபோதையில் மூழ்கி நடிக்க வராமல் தாமதிக்க, படத் தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம், இவரைச் சவுக்காலடித்து, படத்திலிருந்து நீக்கிவிட்டு, தானே நாயகனாக நடித்தார். படம் படுதோல்வியடைந்தது. ஆனாலும், அது குறித்து, டி.ஆர்.சுந்தரம் கவலைப்படவில்லை. 1965- ஆம் ஆண்டு வெளிவந்த ''திருவிளையாடல்" படத்தில் வரும் ''பாட்டும் நானே" என்ற பாடலை பாடிய சிவாஜிக்கு முன்னோடியாக ஜெகதல ப்ரதாபன் என்ற படத்தின் ஒரு பாடல் காட்சியில் 5 வேடங்களில் நடித்தவர் பி.யு.சின்னப்பா. நவராத்திரி 1964 படத்தில் 9 வேடங்களில் சிறப்பாக நடித்த நடிகர் திலகம் சிவாஜிக்கும் தசாவதாரம் திரைப்படத்தில் 10 வேடங்களில் தோன்றிய கமல்காசனுக்கும் முன்னோடியாக ஆர்யமாலா என்ற படத்தில் 10 வேடங்களில் நடித்தார் பி.யு. சின்னப்பா.
பி.யூ.சின்னப்பா தனது திரையுலக மார்க்கெட் பிரபலமாக இருந்த காலத்திலேயே மது, புகை பழக்கம், வரைமுறையற்ற அசைவ உணவுப் பழக்கங்களால் உடல் பருமனாக்கிக் கெடுத்துக் கொண்டார்.
அதன் விளைவாக இளம் வயதிலேயே அதாவது 35 வயதிலேயே இவ்வுலக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்தார். பிருத்விராஜ் படத்தில் நடித்த போது சகுந்தலாவைக் காதலித்து திருமணமும் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. பி.யு.சின்னப்பா நடித்த படங்களில் ஆறு படங்கள் தமிழ் திரையுலகில் மீண்டும் தயாரிக்கப்பட்டன. 1958-ல் சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் ஒன்று. சின்னப்பா நடித்த 6 படங்களின் கதைகள் மீண்டும் படங்களாக்கப்பட்டன. உத்தம புத்திரன் (1940), ஆர்யமாலா (1941), கண்ணகி (1942), பிருதிவிராஜன் (1942), ஜெகதல ப்ரதாபன் (1944), ஹரிச்சந்திரா (1944) ஆகிய சின்னப்பா நடித்த படங்கள் முறையே, உத்தம புத்திரன் (1958 சிவாஜி), காத்தவராயன் (1958 சிவாஜி), பூம்புகார் (1964 எஸ்.எஸ்.ஆர்) ராணி சம்யுக்தா (1962 எம்.ஜி.ஆர்.), ஜெகதல ப்ரதாபன் (1963 என்.டி.ராமாராவ்), ஹரிச்சந்திரா (1968 சிவாஜி) ஆகிய பெயர்களில் வெளிவந்தன.
இது போன்ற சுவாரஸ்யமான தகவல்கள் தெரிந்து கொள்ள நமது வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க யூடியூப் சேனல் உள்ளது அதையும் சப்கிரைப் பண்ணுங்க
நன்றி ✍️✍️✍️
Post a Comment
0Comments