மருத நாயகம் பாடல் காட்சி பாடல் காட்சி எடுக்கப்பட்ட பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்
மருத நாயகம் பாடல் காட்சி பாடல் காட்சி எடுக்கப்பட்ட பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் வாங்க பார்க்கலாம்
1997-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து, தயாரிக்க இருப்பதாக தொடங்கப்பட்ட படம் 'மருதநாயகம்'. அவரே இயக்குநர் பொறுப்பையும் ஏற்று இருந்தார். இப்படத்தின் தொடக்க விழாவில் இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் பங்கேற்றார். மிகப் பிரம்மாண்டமான முன்னோட்டக் காட்சிகள், தொடக்கவிழா என அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய படம் 'மருதநாயகம்'.
நிதி நெருக்கடி காரணமக 'மருதநாயகம்' படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல் அளித்த பல பேட்டிகளில் 'மருதநாயகம்' பற்றிய கேள்விக்கு "அப்படத்தின் பட்ஜெட்டிற்கு எந்த ஒரு தயாரிப்பாளராவது முன்வந்தால் மீண்டும் தொடங்கப்படும்" என்று கூறியிருந்தார்.
இப்படத்தின் இசையை இசைஞானி இளையராசா அமைக்கிறார். மார்ச்சு 4, 2016 அன்று இரவு இணையத்தில் இப்படத்திற்காக இளையராசா உருவாக்கிய பாடல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று வலை தளத்தில் உள்ளது.
பொறந்தது பணையூறு மண்ணு எனும் அந்த பாடலில் இரண்டு காட்சிகள் நம்மை அதிர வைக்கிறது.
கமலின் கால்களை கழுகு கொத்தும் காட்சி....
ஒரு எருமை மாட்டின் மீது கமல் வேகமாக சவாரி செய்யும் காட்சி ...
இந்த இரண்டு காட்சிகளை பற்றி கமல் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
கழுகு கொத்தும் காட்சி
அந்த கழு
கை ஆக்ராவில் இருந்து கொண்டு வந்ததாக கூறிய அவர், "சுற்றுசூழல் பாதிப்புகளால பல பறவை இனங்களை இழந்துவிட்டோம். அதனால் இந்த கழுகுக்கு 5 நட்சத்திர பாதுகாப்பெல்லாம் வைத்துதான் கொண்டு வந்தோம். அதே போல போகும்போதும் மிக பத்திரமாக எடுத்து சென்றார்கள். அந்த கழுகு வந்து என் காலை கொத்தனும். இதற்கெல்லாம் ஒரு மாத காலம் பயிற்சி வேறு கொடுத்தோம். சிஜி எல்லாம் பெரிதாக வளராத காலம். யாருமே நம்பல அதை", என்று கூறினார்.
கை ஆக்ராவில் இருந்து கொண்டு வந்ததாக கூறிய அவர், "சுற்றுசூழல் பாதிப்புகளால பல பறவை இனங்களை இழந்துவிட்டோம். அதனால் இந்த கழுகுக்கு 5 நட்சத்திர பாதுகாப்பெல்லாம் வைத்துதான் கொண்டு வந்தோம். அதே போல போகும்போதும் மிக பத்திரமாக எடுத்து சென்றார்கள். அந்த கழுகு வந்து என் காலை கொத்தனும். இதற்கெல்லாம் ஒரு மாத காலம் பயிற்சி வேறு கொடுத்தோம். சிஜி எல்லாம் பெரிதாக வளராத காலம். யாருமே நம்பல அதை", என்று கூறினார்.
காளை மாட்டின்மீது ஏறி அமர்ந்து ஓட்டும் காட்சி
மேலும் காளை மாட்டின் மீது அமர்ந்து ஓட்டும் காட்சியை குறித்து பேசிய அவர், "காளை மாட்டின் மீது ஏறி ஓட்டுவேன் என்றும் யாரும் நம்பவில்லை. அதில் நெறைய ஐரோப்பிய, அமெரிக்க தொழில்நுட்ப கலைஞர்கள் வேலை செய்தனர். அவர்கள் எல்லாம், "என்ன சொல்றாரு இவரு, ஒரு ஜல்லிக்கட்டு மாட்டு மேல ஏறி உக்காந்து ஓட்றேன்னு சொல்றாரே. ஒரு கோடி ரூபாய் இருந்தா அதை நாங்க சிஜி பண்ணி கொடுத்திடுவோம் என்றார்கள். ஒரு கோடி இல்லை எங்களிடம். அந்த ஒரு கோடியை வைத்து படத்தை இன்னும் கொஞ்ச தூரம் நகர்த்தி இருப்போம். அதனால் தான் அதனை ஒரிஜினலாக செய்தோம்", என்று கூறினார்.
இதுபோன்ற பல தகவல்களை அறிய நமது வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க யூடியூப் சேனல் சப்கிரைப் பண்ணுங்க
நன்றி ✍️✍️
Post a Comment
0Comments