உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிக்கையில் தேங்காய் சீனிவாசன் இடம் பெற்றது எப்படி
காலத்தால் அழியாத படங்களில் சிலவற்றை மட்டும் சொல்லாம் அதில் பழைய தில்லுமுல்லு" திரைப்படம் அனைவரும் பார்த்து இருப்பீர்கள் பார்க்காதவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இதில் நகைச்சுவையில் ஒரு கலக்கு கலக்கி இருப்பார் அந்தகால பிளாக் காமெடி என்றே சொல்லலாம்.தில்லுமுல்லு திரைப்படம்
தேங்காய் சீனிவாசன் அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் தெரிந்து கொள்வோம் வாங்க .முழுமையாக படியுங்கள்
80-களிலும் பிரபலமாக இருந்த நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசன் ஆவார். இவர் கல் மனம் என்னும் நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததால் தேங்காய் ஸ்ரீநிவாசன் என்று பரவலாக அறியப்பட்டார். இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், கதையின் நாயகனாக, எதிர் நாயகனாக, குணசித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்தார்.
தேங்காய் ஸ்ரீநிவாசன், தாய் தந்தை சென்னையைச் சேர்ந்த இராஜவேல் முதலியார் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருவைகுண்டத்தைச் சேர்ந்த சுப்பம்மாள் என்பவருக்கும் மகனாக 1937-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் நாள் பிறந்தார். தன்னுடைய தந்தையைப் போல தானும் நடிகராக வேண்டுமென்ற ஆசையுடன் அதற்கான முயற்சி செய்து வந்தார். அவருடைய தந்தை எழுதிய 'கலாட்டா கல்யாணம்' மேடை நாடகத்தில் அறிமுகமானார். அதற்குப்பிறகு, ரவிந்தர், கே. கண்ணன் உட்பட பல்வேறு எழுத்தாளர்களின் பல்வேறு நாடகங்களில் நடித்தார். இவர் கே. கண்ணனின் கல் மணம் நாடகத்தில், தேங்காய் வியாபாரியாக சிறப்பாக நடித்திருந்தார். அதற்காக அந்நாடகத்தைப் பார்க்க வந்திருந்த கே. ஏ. தங்கவேலு, இவரை தேங்காய் ஸ்ரீநிவாசன் என்றே எல்லாரும் அழைக்க வேண்டும் என்று கூறினார்; அவ்வாறே அழைக்கப்பட்டார்.
போர்ப் பத்திரிகையில் பெயர்.இடம் பெற்றது!
உலகின் புகழ்பெற்ற பத்திரிக்கைகளில் ஒன்றான போர்ப்ஸ் 2013ம் ஆண்டு இந்திய சினிமாவின் 25 சிறந்த நடிப்புக்களை பட்டியலிட்டது.
பராசக்தி படத்தில் சிவாஜி நடிப்பையும், மகாநதி படத்தில் கமல்ஹாசன் நடிப்பையும், மவுனராகம் படத்தில் ரேவதி நடிப்பையும் அந்த பட்டியலில் சேர்த்திருந்த போர்ப்ஸ், தில்லு முல்லுபடத்தில் இருவரது நடிப்பை கொண்டாடியது. ஒருவர் ரஜினிகாந்த், மற்றொருவர் தேங்காய் சீனிவாசன்.
தில்லுமுல்லு நகைச்சுவை படமாக இருந்தாலும் அதில் சீரியஸாகத்தான் நடித்திருப்பார் தேங்காய் சீனிவாசன். இவரது சீரியஸ் நடிப்பை சுற்றியே காமடி கலாட்டாக்கள் அரங்கேறும். ஒரு ஏமாளி தொழிலதிபராக ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி என்கிற அந்த கதாபாத்திரத்தில் அவர் யதார்த்தமாக வாழ்ந்து காட்டியதுதான் லாஜிக்கை பற்றியெல்லாம் யோசிக்கவிடாமல் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது.
கதாபாத்திரத்தின் உடல் மொழி எப்படி இருக்க வேண்டும், எப்படி நடிக்க வேண்டும் என பொதுவாக நடிகர்களுக்கு சொல்லிக் கொடுப்பேன். ஆனால் தில்லுமுல்லுவை பொருத்தவரை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கதாபாத்திரம் எப்படி நடிக்க வேண்டும் என்பதை தேங்காய் சீனிவாசனே முடிவு செய்யட்டும் என விட்டுவிட்டேன் என கூறியிருக்கிறார் இயக்குனர் கே.பாலச்சந்தர்
கமலுக்கே நடிப்பு சொல்லிக்கொடுத்தவர், தேங்காய் சீனிவாசனை அவரது போக்கிலேயே விட்டுவிட முடிவு செய்தது அவரது நடிப்பாற்றலுக்கு ஒரு சிறந்த அங்கீகாரமாக விளங்கியது.
திரைத்துறை
தேங்காய் ஸ்ரீநிவாசன், ஒரு விரல் திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். இவர் ம. கோ. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். சுமார் 900 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், சிவாஜி கணேசன் நடித்த கிருஷ்ணன் வந்தான் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார்.
தேங்காய் சீனிவாசன் லக்ஷ்மி என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு கீதா, ராஜேஸ்வரி என்று இரு மகள்களும், சிவசங்கர் என்ற மகனும் உள்ளனர். கீதாவுடைய மகன் யோகி / சுவரூப்பும், சிவசங்கரின் மகள் ஸ்ருதிகாவும் திரைத்துறையில் நுழைந்தனர்.
தேங்காய் ஸ்ரீநிவாசன் தன்னுடைய உறவினரின் ஈமச் சடங்கிற்காக பெங்களூருவிற்குச் சென்றபோது, மூளை குருதிப்பெருக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி, 50-வது வயதில் 1987-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் நாள் உயிரிழந்தார்
Post a Comment
0Comments